விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவினர் திடீர் கைது: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,December 13 2022]

விஜய் ஆண்டனி நடித்து வரும் ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ரிப்பன் பில்டிங், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகிய பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டு இருந்தது. ஆனால்,அனுமதி இன்றி உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு நடத்துவதை போலீசார் கண்டறிந்து அதன் பிறகே படக்குழுவினர்களை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’பிச்சைக்காரன் 2’ பட குழுவில் ட்ரோன்களை இயக்கிய நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் திடீரென ட்ரோன் மூலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கடற்கரை மணல்..  குரங்கு போல் போஸ்: பிக்பாஸ் நடிகையின் கிளாமர் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குகள் மாதிரி போஸ் கொடுத்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

காலில் விழுந்து ஆசி பெற்ற கெளதம் கார்த்திக்.. யாரிடம் தெரியுமா?

நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த நிலையில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்.. மணக்க மணக்க தயாராகும் பிரியாணி

தளபதி விஜய் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டதாகவும் இதனை அடுத்து முதல்கட்டமாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை கடந்த நவம்பர் மாதம் சந்தித்ததாகவும்

போதும் போதும் என்ற அளவுக்கு அப்டேட் உள்ளது. 'தளபதி 67' படம் குறித்து லோகேஷ் கனகராஜ்

'தளபதி 67' படம் குறித்து போதும் போதும் என்ற அளவுக்கு அப்டேட் தருவேன் என்றும் கொஞ்சம் பொறுமையாக காத்து இருங்கள் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நான் சொன்ன அதையே மக்கள் கேட்கல, இதை மட்டும் கேட்டுருவாங்களா?  சரத்குமார் ஆதங்கம்!

நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னதையே மக்கள் கேட்கவில்லை என்றும் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா என்றும் நடிகரும் அகில இந்திய சமத்துவ