close
Choose your channels

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

Tuesday, November 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து மதியழகன் என்ற விநியோகிஸ்தர் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல்‘செம போதை ஆகாதே’ படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.