close
Choose your channels

நடுக்காட்டில் விடியவிடிய இளம்பெண்ணுடன் 'பேசி' கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

Monday, July 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

25 வயது இளம்பெண் ஒருவருடன் காட்டுப்பகுதியில் நள்ளிரவு முதல் விடிய விடிய பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் ஆகி இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கவிகோத்தகிரி என்ற பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சீனு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். ஜீப் டிரைவர் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருக்க பின்னால் இன்ஸ்பெக்டரும் ஒரு 25 வயது இளம்பெண்ணும் இருந்துள்ளனர்.

அந்த ஜீப் அந்த பகுதியில் பல இடங்களில் சுற்றித் திரிந்து அதன்பின் கடைசியாக ஆள் அரவமில்லாத காட்டுப் பகுதியில் நின்று விடவே, அந்த ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டரும் அந்த இளம் பெண்ணும் இறங்கி காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதை அந்த பக்கமாக சென்ற ஒருவர் தற்செயலாக கவனித்து காட்டுக்குள் இளம்பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் தனிமையில் இருந்ததை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை காவல்துறை மேல் அதிகாரிக்கு அனுப்பி விட்டார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த கண்ணூர் எஸ்பி உடனடியாக அந்த இன்ஸ்பெக்டரை விசாரித்தபோது காட்டுப்பகுதியில் பெண்ணுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட எஸ்பி, அவரை மேலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். காட்டுக்குள் விடிய விடிய இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகி இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.