close
Choose your channels

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்

Monday, October 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சியில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகன் உள்பட ஒரு சில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளையன் முருகன் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது

முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் திருச்சியில் மட்டுமன்றி அதற்கு முன்னர் பல இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு என நான்கு மாநிலங்களிலும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் முருகனின் கொள்ளை கும்பல் கொள்ளை அடித்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் கொள்ளையடித்த பணத்தில் முருகன் சொகுசாக வாழ்ந்ததாகவும், திரைப்பட கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, திரைப்படம் எடுக்கவிருப்பதாக கூறி பல நடிகைகளுக்கு பணத்தைத் தண்ணீராக செலவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது

கொள்ளையன் முருகனை தற்போது தமிழக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் .இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.