மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி: ஒரு ஆச்சரிய தகவல் 

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய 2 திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடித்த ’சாஹோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அவர் தற்போது நடித்து வரும் ’ஜான்’ என்ற திரைப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’பாகுபலி-2’ படத்தை முடித்துவிட்டு தற்போது ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் ராஜமவுலி ஆகியோர் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்தவுடன் மீண்டும் இருவரும் இணைய இருப்பதாகவும் இந்த படமும் இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் ஒரு படமாக இருக்கும் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ’பாகுபலி’, ’பாகுபலி 2’ வெற்றியை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

சென்னை ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்ய முயன்ற புரோக்கர்கள்: அதிர்ச்சி தகவல் 

சென்னையில் உள்ள முக்கிய ஸ்டார் ஓட்டல் ஒன்றை மூன்று புரோக்கர்கள் கேரள தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வீட்டுக்குழாயில் வந்த மது: சினிமா காமெடி உண்மையானதால் பரபரப்பு!

கலகலப்பு என்ற திரைப்படத்தில் சந்தானம் தேர்தலில் போட்டியிடும் ஒரு காட்சியில் வாக்காளர்களுக்கு குழாயில் மதுவை சப்ளை செய்வார். திரைப்படத்தில் வந்த இந்த காமெடி காட்சி கேரளாவில்

பனிப்போர் - அதிபர் ட்ரம்ப்பின் உரை நகலைக் கிழித்த சபாநாயகர் நான்சி

கடந்த 2018 இல் அமெரிக்க அதிபர் டரம்ப்க்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் முக்கிய காரணமாக இருந்தவர் அந்நாட்டு சபாநயாகர் நான்சி பெலோசி

பிறந்த 30 மணி நேரத்தில் குழந்தையை தாக்கிய கொரோனா: சீனாவில் பரபரப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவைரஸ் பயங்கரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..!

Amazon Echo Show 8 கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் எக்கோ-பிராண்டட் சாதனங்களான Echo Buds மற்றும் Echo Frames-களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.