close
Choose your channels

மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி: ஒரு ஆச்சரிய தகவல் 

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய 2 திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடித்த ’சாஹோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அவர் தற்போது நடித்து வரும் ’ஜான்’ என்ற திரைப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’பாகுபலி-2’ படத்தை முடித்துவிட்டு தற்போது ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் ராஜமவுலி ஆகியோர் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்தவுடன் மீண்டும் இருவரும் இணைய இருப்பதாகவும் இந்த படமும் இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் ஒரு படமாக இருக்கும் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ’பாகுபலி’, ’பாகுபலி 2’ வெற்றியை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.