close
Choose your channels

பிரபுதேவாவின் 'ரேக்ளா' படத்தின் கதை இதுதானா?

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான பிரபுதேவா சமீபத்தில் ‘ரேக்ளா’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும், இந்த திரைப்படத்தை சிபியின் ’வால்டர்’ திரைப்படத்தை இயக்கிய அன்பு என்பவர் இயக்குகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரேக்ளா ரேஸ் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் அன்பு சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரேக்ளா ரேஸ் என்பது ஒரு பகுதி தான் என்றும் ஆனால் ரேக்ளா ரேஸ் குறித்த முழு படம் கிடையாது என்று கூறிய அவர், இது ஒரு க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனை, அந்த பிரச்சனையை அவன் எதிர்கொள்வது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் பிரபுதேவா கிராமத்து கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம் மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.