close
Choose your channels

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் சிறை!

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
BJP
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபட பலர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையிலும் இறங்கினர். இதுகுறித்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் சபரிமலை வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்பாபு. இவர் சமீபத்தில் மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சபரிமலை வன்முரை வழக்கில் இவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க பத்தனம்திட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.