இதற்காக தான் சீரியலில் இருந்து விலகினாரா பிரியங்கா நல்காரி? வைரலாகும் புகைப்படங்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’நள தமயந்தி’ என்ற சீரியலில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அந்த சீரியலில் விலக இருப்பதாக செய்திகள் பரவியது. இதையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி என்பவர் நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் திடீரென ஜீ தமிழ் சேனல் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் அதில் பிரியங்கா கேரக்டர் இறந்து விட்டதாக புகைப்படத்தில் காண்பித்து அவருக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ’நள தமயந்தி’ தொடரில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கும் கேரக்டரில் பிரியங்கா நடித்திருந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் அவர் ஹோட்டலை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹோட்டல் திறப்பு விழா புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஹோட்டல் பணிகளை இனிமேல் பிரியங்கா தான் மேற்கொள்ளப் போகிறார் என்றும் அதனால் தான் அவர் சீரியல் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தொழிலதிபர் ஆகியுள்ள பிரியங்கா நல்காரிக்கு ரசிகர்களும் சக நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)