ராகவா லாரன்ஸ் ஆரம்பித்த சேவை.. 20 வருடங்கள் கழித்து தொடரும் அடுத்த தலைமுறை இளைஞர்..!

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சேவையை தற்போது அவரால் பயன் பெற்ற இளைஞர் அடுத்த தலைமுறையினருக்கு தொடர்ந்து உள்ள தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’20 வருடங்களுக்கு முன்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து படிக்க வைத்ததாகவும், அந்த குழந்தை இன்று பெரியவர் ஆகி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர் அடுத்த தலைமுறையினரை படிக்க வைக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இதையடுத்து தனது சேவை சேவையை அடுத்த தலைமுறையினர் தொடர்ந்து வருகின்றனர் என்றும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது கணவர் இறந்து விட்டதாகவும், இந்த குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் என்றும் கூறினார். அப்போது நான் அந்த குழந்தைகளை எனது வீட்டிலேயே தங்க வைத்து படிக்க வைத்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் நான் என் சொந்த வீட்டை குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டு வாடகை வீட்டுக்கு சென்றேன்.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் என்னிடம் படிக்க வந்த குழந்தை தற்போது நல்ல வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறார். அவர் தற்போது தன்னால் முயன்ற குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று என்னிடம் கூறியிருக்கிறார். என்னுடைய சேவை அடுத்த தலைமுறைக்கு சென்றுள்ளதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு குழந்தை படித்தால் வைத்தால் மட்டும் போதாது, அந்த குழந்தை படித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு, தன்னை போலவே மற்ற குழந்தைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும். சேவை என்பதுதான் உண்மையான கடவுள். அந்த சேவையை தற்போது அடுத்த தலைமுறையினர் தொடர ஒப்புக்கொண்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமுதாயத்தை ஓரளவு நல்ல நிலைக்கு இதன் மூலம் கொண்டு வர கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'காக்கா-கழுகு' பஞ்சாயத்து தீராதா? 'தலைவர் 171' டைட்டில் கசிந்ததால் பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேய் படத்தை கூட வித்தியாசமாக கொடுத்துள்ள பார்த்திபன்.. 'டீன்ஸ்' டீசர்..!

பார்த்திபனின் அடுத்த படமான 'டீன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிரட்டி உள்ளது.

விமல் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை.. சம்பளம் இத்தனை லட்சமா?

நடிகர் விமல் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு

அரவிந்த்சாமியும் இல்லை, நிவின்பாலியும் இல்லை.. ஜெயம் ரவி கேரக்டரில் இவர்தான்: 'தக்லைஃப்' அப்டேட்..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க இருந்த நிலையில்

சினிமாவுக்கு வந்த 'கார்த்திகை தீபம்' நடிகை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பலர் வெள்ளித்திரையிலும் நடித்து வருகின்றனர் என்பதும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட பல நடிகைகள்