close
Choose your channels

ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட 'ராஜாராணி 2' நடிகை: 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை!

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ராஜாராணி 2’ சீரியலில் நடித்த நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்ததில், 24 மணி நேரத்தில் குற்றவாளி பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’ராஜாராணி 2’ என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பிரவீணா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரவீணாவின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளங்களில் மர்ம நபர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து அவர் மெசேஜ்களை பிரவிணாவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. அவர்களை பிளாக் செய்த நடிகை பிரவீணா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக மார்பிங் செய்வதை தொடர்ந்து செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசில் பிரவீணா புகார் அளித்த நிலையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இதனை அடுத்து குற்றவாளிகளைத் 24 மணி நேரத்தில் டெல்லி வரை சென்று பிடித்த காவல்துறையினருக்கு மிக்க நன்றி என பிரவீணா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.