செல்லாத நோட்டை வைத்திருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றம்

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கமலா அம்மாள் என்ற 92 வயது மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.31,500 சேமித்து வைத்திருந்தார். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு குறித்து அறியாத கமலம்மாள் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் வங்கியில் கொடுத்து மாற்றாமல் இருந்துள்ளார். 

இந்தநிலையில் தற்செயலாக தற்போது அந்த பணம் செல்லாது என தெரிய வந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார். கடைசி காலத்தில் செலவுக்கு மற்றும் இறுதி சடங்கிற்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணம் செல்லாது என்பதால் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த செய்தி குறித்து சமூக வலைதளங்களில் மற்றும் இணையதளங்களில் வைரலானது.

இதனை அடுத்து அந்த மூதாட்டிக்கு ரஜினி மக்கள் மன்றம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அவர் சேமித்து வைத்திருந்த 31 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினார்கள். இதனை பெற்றுக் கொண்ட அந்த மூதாட்டி ரஜினி ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம் செல்லாது என்றதும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மூதாட்டிக்கு ரஜினி ரசிகர்கள் செய்த உதவி மிகப்பெரியதானது என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

'தளபதி 64' படப்பிடிப்பில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜய்சேதுபதி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

இன்ஸ்டாகிராமில் பழகி 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

இன்ஸ்டாகிராமில் பழகி பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவரின் கணவர், தான் பணிபுரியும் அலுவலகத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா? பொங்கி எழுந்த சின்மயி!

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த ஆண்டு மீடூ குற்றச்சாட்டு ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சின்மயியை தொடர்ந்து மொத்தம் ஒன்பது பெண்கள் வைரமுத்து

டிரம்ப் மரணம் அடையலாம், புதின் கொல்லப்படலாம், 2020ஆம் ஆண்டின் கணிப்பு!

நாஸ்டர்டாம்ஸ் போலவே இவ்வுலகில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை சரியாக கணித்தவர் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்ற பெண்.