close
Choose your channels

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை!

Friday, December 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவரின் கணவர், தான் பணிபுரியும் அலுவலகத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சின்னத்திரைகளில் பிரபலமாக சீரியல்களிலும், ஒரு சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வரும் ரேகா என்பவருக்கும், சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கோபிநாத்துக்கு தான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டதாக தெரிகிறது

இதனையடுத்து நேற்று இருவருக்கும் மீண்டும் இதுகுறித்து சண்டை வந்ததால் கோபிநாத் வீட்டை விட்டு வெளியேறி தனது அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று கிறிஸ்மஸ் என்பதால் அலுவலகம் விடுமுறையாக இருந்தாலும் தன்னிடமிருந்த சாவி ஒன்றின் மூலம் அலுவலகத்தை திறந்து அலுவலகத்தில் தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

இன்று காலை அலுவலகம் வந்த ஊழியர்கள் கோபிநாத் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மனைவியுடன் நடைபெற்ற வாக்குவாதத்தால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு சில கடன் பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.