மாணவி பிரதீபா தற்கொலை: ரஜினிகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த 'காலா' புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியை ரஜினியிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி தன்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாகவும், அந்த மாணவியின் குடும்பத்தினர்களுக்குக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு பெரியவர்கள் கலந்து ஆலோசித்து நிச்சயம் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது மேலும் தொடரகூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

More News

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவர் மரணம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன், 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' உள்ளிட்ட ஒருசில பாடல்கள் பாடியுள்ளார். தந்தையை போலவே இசைத்துறையில் ஆர்வம் உள்ள அமீன், படிப்பிலும் சிறந்தவர்

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: விழுப்புரம் மாணவி தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவிக்கு தேசிய அளவில் 12வது இடம்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது.

மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து: நீரவ் மோடி, விஜய் மல்லையா குறித்த முக்கிய ஃபைல்கள் சாம்பலா?

மும்பை நகரில் உள்ள பல்லார்டு பியர் என்ற பகுதியில் உள்ள சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது