close
Choose your channels

மாணவி பிரதீபா தற்கொலை: ரஜினிகாந்த் இரங்கல்

Tuesday, June 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த 'காலா' புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியை ரஜினியிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி தன்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாகவும், அந்த மாணவியின் குடும்பத்தினர்களுக்குக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு பெரியவர்கள் கலந்து ஆலோசித்து நிச்சயம் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது மேலும் தொடரகூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.