close
Choose your channels

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் திடீர் போலீஸ் பாதுகாப்பு! 

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்தநாள கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை சரிசெய்யும் சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நலத்தோடு இருக்கிறார் என்றும் அவர் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருடைய நெருங்கிய உறவினர்களில் ஒருவரும் நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை முன் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நான்கு பெண் காவலர்கள் மருத்துவமனை முன்பு பாதுகாப்புக்காக போடப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் வெளி ஆட்கள் மருத்துவமனையில் வராமல் இருப்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகிறது.

மருத்துவமனை உள்ளே மற்றும் வெளியே என மொத்தம் 30 காவல்துறையினர் திடீரென பாதுகாப்புக்காக போடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.