close
Choose your channels

விருது பெற்றது மகிழ்ச்சி, ஆனால் ரொம்ப வருத்தம்: டெல்லி கிளம்பும் முன் ரஜினி பேட்டி!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதைப் பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி செல்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த விருது நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி கிளம்பினார். அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’மிக உயரிய இந்த விருதைப் பெறுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த விருது தனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த உயரிய விருதை பெறும் நேரத்தில் கே பாலச்சந்தர் அவர்கள் இல்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று விருதை வாங்கிவிட்டு சென்னை திரும்பியவுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.