கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது, மக்களின் ஆதரவு வேண்டும் என்று கூறியது. இன்னொன்று பல வருடங்களாக ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருப்பது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக தகுதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த இரு கருத்துக்களும் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த ரஜினிகாந்த் அதன்பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,

நான் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

உங்களை போன்ற ரசிகர்களை நன அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்' என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து

'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜூன்ரெட்டி' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே.

விக்ராந்த் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவருடைய கால்ஷீட் டைரி இரண்டு வருடங்களுக்கு நிரம்பி இருப்பதாக கூறப்படும்

புதிய காட்சிகள் இணைப்பு: வடசென்னை குழுவினர் தகவல்

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை திருநாளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.