close
Choose your channels

கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

Friday, October 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்று ரசிகர்கள் கூட்டத்தை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது, மக்களின் ஆதரவு வேண்டும் என்று கூறியது. இன்னொன்று பல வருடங்களாக ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக இருப்பது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக தகுதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த இரு கருத்துக்களும் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த ரஜினிகாந்த் அதன்பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,

நான் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

உங்களை போன்ற ரசிகர்களை நன அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்' என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.