ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திப்பார்களா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல், பகுத்தறிவு அரசியல் என இருவரும் அரசியலில் வெவ்வேறு பாதையில் இருந்தாலும், மக்கள் நலன் என்ற ஒரே கொள்கை இருவரிடமும் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தான் தயார் என்று ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது சிவகாசியில் அவர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’மக்களுக்கு நல்லது நடக்கும் எனில் ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்று சேரத் தயார்’ என்று மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் உடன் இணைந்து செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுக திமுக என இரண்டு பெரிய திராவிட கட்சிகளை வீழ்த்துவதற்கு ரஜினி-கமல் இணைந்தால் மட்டுமே சாத்தியம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

திருமதி ஹிட்லர்: ஜீடிவியில் அம்பிகா நடிக்கும் புதிய தொடர்!

ஜீ டிவியில் நேற்று முதல் 'திருமதி ஹிட்லர்' என்ற புதிய தொலைக்காட்சி தொடர் ஆரம்பமாகியுள்ளது. மாலை 6,30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார்

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

கொரோனா காலத்தில் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இருந்து வந்தது. இதனால் கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஓடிடியில் மாதவனின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை

சித்ராவின் கடைசி நாள் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ வைரல்!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதியில் நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

தொண்டர் ஆரம்பித்த கட்சிக்கு தலைவர்: எம்ஜிஆர் பாணியில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' என்றும் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.