close
Choose your channels

ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு

Tuesday, December 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திப்பார்களா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல், பகுத்தறிவு அரசியல் என இருவரும் அரசியலில் வெவ்வேறு பாதையில் இருந்தாலும், மக்கள் நலன் என்ற ஒரே கொள்கை இருவரிடமும் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தான் தயார் என்று ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது சிவகாசியில் அவர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’மக்களுக்கு நல்லது நடக்கும் எனில் ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்று சேரத் தயார்’ என்று மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் உடன் இணைந்து செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுக திமுக என இரண்டு பெரிய திராவிட கட்சிகளை வீழ்த்துவதற்கு ரஜினி-கமல் இணைந்தால் மட்டுமே சாத்தியம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.