close
Choose your channels

டிவி பார்ப்பது ஒரு குத்தமா… தனது தந்தையையே சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவவீரர்!!!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிவி பார்ப்பது ஒரு குத்தமா… தனது தந்தையையே சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவவீரர்!!!

 

ரவில் டிவியை அணைக்க மறுத்தற்காகத் தனது தந்தையையே ஒரு முன்னாள் இராணுவவீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் தந்தையும் ஒய்வுப்பெற்ற சிப்பாய் எனத் தெரிய வந்துள்ளது. அவருக்கு 80 வயதாகும் நிலையில் தூக்கம் வராமல் இரவில் நீண்ட நேரம் டிவி பார்த்து இருக்கிறார்.

இந்நிலையில் டிவியை அணைக்குமாறு மகன் தந்தையிடம் கடுமையாகக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் மகனே தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இருக்கிறார். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை அன்று உத்திரபிரதேச மாநிலம் நசீர்பூர் எனும் பகுதியில் நடைபெற்று இருக்கிறது.

இரவில் நீண்டநேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த லாலா ராம் எனும் தனது தந்தையிடம் ஓய்வுப்பெற்ற இராணுவவீரர் அசோக் கதிஹார் தான் தூங்க வேண்டும் டிவியை நிறுத்துங்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால் லாலா ராம் டிவியை அணைக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றி தந்தையை கீழே தள்ளிவிட்ட அசோக், பின்னர் உரிமம் பெற்ற தனது இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கொண்டு தந்தையை சுட்டு இருக்கிறார். பின்னர் போலீசுக்குப் பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டினால் கடுமையாகத் தாக்கப்பட்ட லாலா ராம் உயிரிழந்து விட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் இராணுவவீரர் அசோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.