'ரெளடி பேபி' பாடலுடன் கனெக்சன் ஆகும் 'சூர்யா 38' பட பாடல்!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

சூர்யா நடித்து வரும் 38வது திரைப்படமான 'சூரைப்போற்று' திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் பாடல்களில் ஒன்றை பாடகி Dhee பாடிவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதே பாடகி தான் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி யூடியூபில் சாதனை செய்த 'ரெளடி பேபி' பாடலை தனுஷுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய முதல் படமான 'இறுதிச்சுற்று' படத்தில் இடம்பெற்ற 'ஏ சண்டக்காரா.... என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி Dhee பாடிய பாடலை சற்றுமுன் ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும், மிக சிறப்பாக இந்த பாடல் வந்துள்ளதாகவும், இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

More News

தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த திமுக பிரமுகர் தலைமறைவு

தூத்துக்குடி அருகே சொந்த தம்பியையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தலைமறைவான திமுக பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருமணத்திற்குப் பின்னும் பலவந்தமாக படுக்கைக்கு அழைத்தார்கள்! முன்னணி நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

அனைத்து மொழி திரைத்துறையில், பட வாய்ப்பு கேட்டு வரும்  நடிகைகள், பரவலாக கூறிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும்...

15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர்!

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், 15 வயது சிறுமியை ஓட்டுநர் ஒருவர், கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திமுகவில்  இருந்து என்னை நீக்கிய காரணமே வேற: ராதாரவி

'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராதாரவி மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்

மகனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய ஒட்டு மொத்த குடும்பமே கைது!

குடிபோதை அடிக்கடி தகராறு செய்த மகனை பெற்றோர்களும், அவர்களுடைய மற்ற இரண்டு மகன்களும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியதால் ஒட்டுமொத்த குடும்பமே தற்போது ஜெயிலில் உள்ளனர்.