close
Choose your channels

என்கவுண்டரால் கொல்லப்பட்ட ரவுடிக்கு 50க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் தொடர்பா?

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ரவுடி சென்னையில் 50 க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தூத்துக்குடி வட்டாரத்தில் கள்ளச்சாராயம், கொலை கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த நீராவி முருகன் என்ற ரவுடியை காவல்துறையினர் சமீபத்தில் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்கவுண்டர் முருகன் குறித்த பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

குறிப்பாக நீராவி முருகன் எப்போது சென்னைக்கு வந்தாலும் கொள்ளையடித்த பணத்தை தண்ணீராக செலவு செய்வான் என்றும் குறிப்பாக நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் பணத்தை வாரி இறைத்ததோடு, கொள்ளையடித்த நகைகளை பரிசாக கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் சென்னைக்கு எப்போது வந்தாலும் வடபழனி, போரூர், விருகம்பாக்கம், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் தங்கி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் சுமார் 50 நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் நீராவி முருகனிடம் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.