திரைப்படமாகிறது சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நாவல்!

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. நாதஸ்வர கலைஞர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த நாவல் ஏற்கனவே கல்லூரி மாணவர்களால் நாடகம் நடத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நாவல் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த தகவலை இந்நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரஜினியின் 'பாபா', 'விஷாலின் 'சண்டக்கோழி, சண்டக்கோழி 2'. விக்ரமின் 'பீமா', 'பாலாவின் 'அவன் இவன்', உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள நிலையில் அவர் எழுதிய முழுநாவல் ஒன்று தற்போது திரைப்படமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாதஸ்வர கலைஞர்களாக நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர்களின் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

More News

தனுஷின் 'அசுரன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விருதுநகரில் தொடங்கியது.

'தல 59' படத்தில் எத்தனை பாடல்கள்?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், தற்போது 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

43 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய சுஹாசினி!

நடிகை, இயக்குனர் சுஹாசினி, 43 வருடங்களுக்கு பின் மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பதிவு செய்த ஆசிரியை வீட்டுக்கு தீவைப்பு!

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஒவ்வொரு இந்தியனும் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் உள்ள நிலையில் ஒருசிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில்

போலி திருமண சான்றை வைத்து மிரட்டுவதாக காதலர் மீது தமிழ் நடிகை புகார்

கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'பட்டதாரி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதிமேனன். இவர் இதே படத்தில் நாயகனாக நடித்த அபி சரவணனை காதலித்தார்.