close
Choose your channels

போலி திருமண சான்றை வைத்து மிரட்டுவதாக காதலர் மீது தமிழ் நடிகை புகார்

Monday, February 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'பட்டதாரி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதிமேனன். இவர் இதே படத்தில் நாயகனாக நடித்த அபி சரவணனை காதலித்தார். ஆனால் அதன் பின் கருத்துவேறுபாடு காரணமாக காதல் பிரேக் அப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தன்னுடைய இமெயிலை ஹேக் செய்து தன்னுடன் திருமணம் ஆனதாக போலி சான்றிதழ் தயாரித்து தனக்கு மிரட்டல் விடுப்பதாக நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதிமேனன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் அபி சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவருடைய பெற்றோர்கள் வந்து மன்னிப்பு கேட்டதால் தான் புகார் அளிக்கவில்லை என்றும் தற்போது போலி திருமண சான்றிதழை வைத்து தன்னை மிரட்டுவதோடு தான் நடித்து வரும் படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தொல்லை கொடுப்பதாகவும் அதிதிமேனன் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்யவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.