close
Choose your channels

சீரியலில் மாமியார் - மருமகள்.. நிஜத்திலும் மாமியார் - மருமகள் ஆகும் ஆச்சரியம்..!

Thursday, May 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியலில் மாமியார் மருமகள் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் நிஜமாகவே மாமியார் மருமகள் ஆகப்போகும் ஆச்சரியம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சக்திவேல்’ என்ற சீரியலில் மாமியாராக ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமான சாந்தி நடித்து வருகிறார். இதே அந்த சீரியலில் அவரது மருமகளாக சவுண்ட் சந்தியா என்பவர் நடித்து வருகிறார். மாமியார் மருமகள் கேரக்டரில் சாந்தி மற்றும் சந்தியா ஆகிய இருவரும் சூப்பராக நடித்து வரும் நிலையில் இவர்கள் நிஜமாகவே மாமியார் மருமகளாக ஆகப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

‘மெட்டிஒலி’ சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணனுக்கும் நடிகை சந்தியாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் திருமணம் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுண்ட் சந்தியா என்று கூறப்படும் நடிகை சந்தியா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். பிகாம் பிஎல் எம்எல் பட்டதாரியான இவர் ’கண்மணி’ என்ற சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு ’சத்யா’ ‘சுந்தரன் நீயும் சுந்தரன் நானும்’ ’நம்ம வீட்டு பொண்ணு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்.

இது முழுக்க முழுக்க ஒரு அரேஞ்ச் மேரேஜ் என்றும் திருமணத்திற்கு சின்னத்திரை உலகினர் பலர் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.