ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்

  • IndiaGlitz, [Thursday,January 23 2020]

ஜோதிடர் மனைவி ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலம் அருகே 62 வயது பாலசுப்பிரமணியம் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது

இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது இந்த கொலையில் ஜோதிடர் இளையராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் நால்வரும் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்தபோது இளையராஜா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்

தன்னுடைய மனைவிக்கும் தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்துக்கும் கள்ள உறவு இருந்ததாகவும் அதை தான் கண்டித்ததாகவும், ஆனால் இருவரும் கள்ள உறவைத் தொடர்ந்து நீடித்து வந்ததால் ஆத்திரமடைந்த தான் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

More News

'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்? பிரபல இயக்குனர் எச்சரிக்கை!

அசுரன் படத்திற்கு விருது கிடைக்கவிலை என்றால் ஒட்டுமொத்தமாக தேசிய விருதையே புறக்கணிப்போம் என இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை!

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்

அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி!

திருமணமான 4 மாதத்தில் தனது கணவர் அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுபிடித்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து கூறிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்தியம் கடைபிடிக்கப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்ததே.