close
Choose your channels

'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்? பிரபல இயக்குனர் எச்சரிக்கை!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசுரன் படத்திற்கு விருது கிடைக்கவிலை என்றால் ஒட்டுமொத்தமாக தேசிய விருதையே புறக்கணிப்போம் என இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், ’வடசென்னை படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில அரசியல் காரணங்களால் அந்தப் படத்திற்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை அசுரன் படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றால் ஒட்டு மொத்த தேசிய விருதையும் நாங்கள் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் என்றும், அவர் தமிழகத்தில் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்

வடசென்னை படத்தில் தன்னுடைய ராஜன் கேரக்டர் இந்த அளவுக்கு மக்கள் மனதில் இருப்பதற்கு காரணமே வெற்றிமாறன் என்றும் விரைவில் வெற்றி மாறன் தனது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குவார் என்று அமீர் அந்த விழாவில் பேசினார். இயக்குநர் அமீர் தற்போது துரை இயக்கிவரும் நாற்காலி என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.