close
Choose your channels

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா என்ன செய்கிறார் தெரியுமா?

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடும் மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்து கொண்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபல தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய முடிவு செய்தார் என்பதும், அதன்பின் அவர் 2 தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே அவர் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மட்டும் ’சாகுந்தலா’ ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லப்பிராணிகளுடன் விளையாடினால் மன அழுத்தம் நீங்கி விடும் என்று யாராவது சொன்னால் தான் நம்பியிருக்க மாட்டேன் என்றும் ஆனால் தற்போது செல்லப்பிராணிகளுடன் விளையாடும் போது மன அழுத்தம் குறைவதை கண்கூடாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மன அழுத்தம் தொடர்ந்தால் தான் நண்பர்களுடன் சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.