'பிஸ்கோத்' வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் வந்த சிக்கல்: இயக்குனர் ஆர்.கண்ணன்

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

’பிஸ்கோத்’ திரைப்படம் வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் ஒரு சிக்கல் ஏற்பட்டதாகவும் அந்த சிக்கல் சந்தானம் அவர்களால் தான் தீர்க்கப்பட்டது என்றும் இயக்குனர் ஆர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

’பிஸ்கோத்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக நேற்று முன்தினம் வெளியான நிலையில் நேற்று படக்குழுவினர்களின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது இயக்குனர் கண்ணன் பேசியபோது ’சந்தானம் மட்டும் இல்லை என்றால் இந்த படம் வெளி வந்திருக்க வாய்ப்பே இல்லை. படம் ரிலீஸாக இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் திடீரென 50 லட்ச ரூபாய் இருந்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே நான் சந்தானம் வீட்டிற்கு சென்று ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அவர் உடனே ரூபாய் 50 லட்சத்தை எடுத்துக் கொடுத்தார். அவரால் தான் இந்த படம் தற்போது ரிலீசாகி உள்ளது.

சந்தானம் மட்டுமின்றி தயாரிப்பாளர், பைனான்சியர்கள் என பலரும் இந்த படம் வெளிவருவதற்கு காரணமாக இருந்தார்கள். இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தாமதமானதால் வட்டி மட்டுமே ரூ.3 கோடி வந்துவிட்டது. இருப்பினும் பைனான்சியர் ராம்பிரசாத் அந்த வட்டிப் பணத்தை அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறியதால் அவருடைய பெருந்தன்மை காரணமாக இந்த படம் வெளியாகி உள்ளது’ என்று கூறியுள்ளார்.

More News

தம்பி ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துக்கள்: பிரபல அரசியல்வாதியின் 'மூக்குத்தி அம்மன்' விமர்சனம்!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்த நிலையில்

'மூக்குத்தி அம்மன்' படத்தால் யூடியூபில் திடீரென வைரலான வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

ஒரு பக்கம் ரெளடி பேபி, இன்னொரு பக்கம் கொலைவெறி: தனுஷின் உற்சாக டுவீட்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுடி பேபி மற்றும் கொலைவெறி பாடல் குறித்து பதிவு செய்துள்ள டுவீட் தற்போது வைரலாகி வருகிறது 

லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எப்படி தாங்குவாய் மகளே! லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ் தந்தை!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் என்பவர் திடீரென நேற்று காலமானதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது