close
Choose your channels

'பிஸ்கோத்' வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் வந்த சிக்கல்: இயக்குனர் ஆர்.கண்ணன்

Monday, November 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பிஸ்கோத்’ திரைப்படம் வெளியாக 2 மணி நேரத்திற்கு முன் ஒரு சிக்கல் ஏற்பட்டதாகவும் அந்த சிக்கல் சந்தானம் அவர்களால் தான் தீர்க்கப்பட்டது என்றும் இயக்குனர் ஆர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

’பிஸ்கோத்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக நேற்று முன்தினம் வெளியான நிலையில் நேற்று படக்குழுவினர்களின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது இயக்குனர் கண்ணன் பேசியபோது ’சந்தானம் மட்டும் இல்லை என்றால் இந்த படம் வெளி வந்திருக்க வாய்ப்பே இல்லை. படம் ரிலீஸாக இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் திடீரென 50 லட்ச ரூபாய் இருந்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே நான் சந்தானம் வீட்டிற்கு சென்று ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அவர் உடனே ரூபாய் 50 லட்சத்தை எடுத்துக் கொடுத்தார். அவரால் தான் இந்த படம் தற்போது ரிலீசாகி உள்ளது.

சந்தானம் மட்டுமின்றி தயாரிப்பாளர், பைனான்சியர்கள் என பலரும் இந்த படம் வெளிவருவதற்கு காரணமாக இருந்தார்கள். இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தாமதமானதால் வட்டி மட்டுமே ரூ.3 கோடி வந்துவிட்டது. இருப்பினும் பைனான்சியர் ராம்பிரசாத் அந்த வட்டிப் பணத்தை அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறியதால் அவருடைய பெருந்தன்மை காரணமாக இந்த படம் வெளியாகி உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.