சசிகலா பதவியேற்பு இல்லையா? சென்னை பல்கலையில் பாதுகாப்பு வாபஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று தமிழக கவர்னரை சசிகலா சந்தித்தும், பதவியேற்பு குறித்து அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் சற்று முன்னர் டிஜிபி, தலைமைச்செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் கவர்னரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.
இந்நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட அனைத்து போலீசாரும் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் இப்போதைக்கு சசிகலா பதவியேற்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.