தமிழக மாணவர்களின் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட், கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ ஒரு வாதத்தை முன்வைத்தது. மதுரை ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்தி கருணை மதிப்பெண்களை வழங்கினால் ஒருசில தமிழக மாணவர்கள் மொத்த மதிப்பெண்ணான 720ஐ விட அதிகமாக பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. குறிப்பாக 512017442 என்ற ரோல் எண்ணை கொண்ட மாணவர் ஏற்கனவே நீட் தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், அவருக்கு 196 கருணை மதிப்பெண்களை கொடுத்தால் அவருடைய மொத்த மதிப்பெண் 750 ஆக மாறிவிடும் என்றும் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய ஒரு மாணவர் எப்படி 750 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கேள்வியை சி.பி.எஸ்.இ எழுப்பியது.

இதனையடுத்தே தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

More News

'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

நான் என்ன இளிச்சவாயனா? ரம்யாவை வறுத்தெடுக்கும் சினேகன்

பிக்பாஸ் வீட்டின் ஒருசில மணி நேர விருந்தாளியாக சமீபத்தில் சென்று வந்தவர் சினேகன். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தவர்

அட்வைஸ் பண்ண தகுதி வேண்டாமா? மகத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை.

விஜய்சேதுபதி, த்ரிஷாவின் போட்டியை தவிர்த்த ஆர்யா

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் இன்று 'போத' என்ற தமிழ்ப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது.

நான் கார் ஓட்டிகிட்டே தாய்ப்பால் கொடுத்திருக்கேன்: அமெரிக்க மாடலுக்கு போட்டியாக தமிழ் நடிகை

சமீபத்தில் அமெரிக்காவின் மாடல் அழகி மாரா மார்ட்டின் என்பவர் தனது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே ராம்ப்வாக் செய்தார்.