close
Choose your channels

நான் என்ன இளிச்சவாயனா? ரம்யாவை வறுத்தெடுக்கும் சினேகன்

Friday, July 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டின் ஒருசில மணி நேர விருந்தாளியாக சமீபத்தில் சென்று வந்தவர் சினேகன். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தவர் என்ற முறையில் அவரது அறிவுரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பயன்படலாம் என்ற நோக்கத்தில் பிக்பாஸ் அனுப்பி வைத்தார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. கார்த்தி, சூரி, பாண்டிராஜ் வந்தபோது விழுந்து விழுந்த கவனித்த போட்டியாளர்கள் சினேகனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இந்த வீட்டில் யாரும் உண்மையாக இல்லை, முகமூடி போட்டுள்ளீர்கள் என்று சினேகன் சொன்னதை, அவர் வீட்டை விட்டு வெளியே போன பின்னர் ரம்யா கடுமையாக விமர்சனம் செய்தார். இவர் யார் நான் உண்மையாக இல்லை என்று கூறுவதற்கு? இவருடைய அறிவுரை நமக்கு தேவையில்லை? என்று கூறினார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சினேகன், 'நான் சொன்னதையேதான் எனக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற கார்த்தியும் பாண்டிராஜூம் கூறினார்கள். அவர்களை ரம்யா ஏன் ஒன்றுமே சொல்லவில்லை. கார்த்தி பெரிய நடிகர், பாண்டியராஜ் பெரிய இயக்குனர் அதனால கேட்கலையா? சிநேகன் இளிச்சவாயன்னு நினைச்சுக் கேட்டுட்டீங்களா... உங்க நேர்மைக்கான அடையாளம், இதுதானா ரம்யா?" என்று சினேகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரம்யா இந்த கேள்வியை என்னிடம் நேருக்கு நேராக கேட்டிருந்தால் அவரை பாராட்டியிருப்பேன், முதுகுக்குப் பின்னாடி பேசுறது சரியில்லை' என்று சினேகன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.