close
Choose your channels

'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

Friday, July 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் 'சூர்யா 37' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது

இந்த நிலையில் 'சூர்யா 37' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ், ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி ஆகிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அல்லுசிரிஷ் இந்த படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: 'சூர்யா 37' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் நான் நடித்து கொண்டிருக்கும் மற்றொரு படமான 'ஏபிசிடி' என்ற படத்தின் படப்பிடிப்பு தேதியும் ஒரே நேரத்தில் வருவதால் நான் 'சூர்யா 37' படத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. என்னுடைய இந்த நிலையை இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களும் புரிந்து கொண்டார். இருப்பினும் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளித்த சூர்யா, கே.வி.ஆனந்த், லைகா நிறுவனம் ஆகியோர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.