10 நிமிடம் தாமதம் ஒரு குற்றமா? ஆசிரியர் தண்டனையால் பலியான சென்னை மாணவன்

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் காரணமாக பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் நரேந்திரன் இன்று பள்ளிக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் என்பவர் மாணவர் நரேந்திரரை டக்-வாத் என்னும் முட்டியால் நடக்கும் தண்டனையை அளித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த மாணவர் நரேந்திரர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர் நரேந்திரரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரந்து வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.

பள்ளிக்கு பத்து நிமிடம் தாமதமாக வந்தது ஒரு பெரிய குற்றமா? இதற்கெல்லாம் தண்டனையா? என்று சக மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.,

More News

வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய்: முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்றால் அதைவிட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் அறிவிப்பு குறித்து அப்துல்கலாம் பேரன் தெரிவித்த கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துவிட்டு அன்றைய தினமே மக்களை சந்திக்கவிருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கலாம் இல்லத்தில் இருந்து கமல் தொடங்கும் கனவுப்பயணம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தது குறித்து நேற்று பார்த்தோம்.

ஒரே தயாரிப்பாளருடன் மூன்றாவது முறையாக இணையும் கவுதம் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் மகனும் இளையதலைமுறை நடிகருமான கவுதம் கார்த்திக் தற்போது கோலிவுட் திரையுலகில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் ஒரே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்

எம்ஜிஆர் மனைவி ஜானகி வேடத்தில் 'கபாலி' நடிகை

எம்ஜிஆரின் அனிமேஷன் திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்ற நிலையில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.