close
Choose your channels

வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய்: முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவியரசு வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்றால் அதைவிட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து கூறிய தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக வைரமுத்து கூறிய பின்னரும் தொடர்ந்து அவருக்கு எதிராக அநாகரீகமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருசிலர் அவரது குடும்பத்தினர்களை கொச்சையாக பேசி வருவது அருவருப்பின் உச்சகட்டமாக உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜக பிரமுகருமான  நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று வைரமுத்துவை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், 'கவிஞர் வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாயை தர தொண்டர்கள் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். மேலும்  இந்து மதத்தை யார் தவறாக பேசினாலும் அவர்களை கொலை செய்யவும் தயங்க கூடாது என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.