8 வருட கடின உழைப்பு.... இதனால் வாய்ப்புகள் பறிபோனது....! பிரபல சீரியல் நடிகர் பேட்டி....!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வேலைக்காரன் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் சபரி. இவர் அண்மையில் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு, தான் கடந்து வந்த பாதை குறித்து பேசியிருந்தார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை இதில் பார்க்கலாம்.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன், விஜய் டிவியில் இண்டர்ன்ஷிப் சேர்ந்து வேலை செய்து, தற்போது அதே சேனலில் சிறந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் சபரி. புதிய தலைமுறை செய்தி சேனலில் முதன் முறையாக நிகழ்ச்சி இயக்குனராக பணியை துவங்கிய இவர், இதைத்தொடர்ந்து பல தனியார் சேனல்களில் ஆர்ஜே, தொகுப்பாளர் (விஜே)-வாக பணியாற்றியுள்ளார். இதைப்போல பல விளம்பரங்களில் மாடல்-ஆகவும் நடித்துள்ளார். இதற்கிடையே மோட்டிவேஷன் ஸ்பீக்கர்-ஆகவும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார்.

சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு முயற்சியை துவங்கிய சபரி, ஆரம்ப காலகட்டத்தில் ஒருசில குறும்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து ஸ்மைல் சேட்டை என்ற யுடியூப் சேனலில், 143 with sabari என்ற வெப்தொடரில் நடித்து வந்தார். இதன்பின் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவை தட்ட விஐபி 2, துப்பறிவாளன், சைக்கோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை போன்ற தமிழ் படங்களில், துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

சரவணன் மீனாட்சி-ல் ரியோவின் தம்பியாக நடிக்க, பாரதி கண்ணம்மா, பொம்மு குட்டி அம்மாவுக்கு, ராஜா ராணி-2 போன்ற சீரியல்களில் நாயகனாக நடிக்க முதலில் சபரியைத் தான் தேர்வு செய்துள்ளார்கள். டெஸ்ட் ஷூட் எல்லாம் முடிந்த நிலையிலும், வாய்ப்புகள் வேறு சில காரணங்களால் தவறிப்போயுள்ளது. இதன்பின் நம்பிக்கை இழந்த இவருக்கு வேலைக்காரன் சீரியல் தான் புதுமுக ஹீரோவாக இவரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த தொடர் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சபரி சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டியில் உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'எனிமி' படத்தின் அடுத்தகட்ட பணி: விஷால் வெளியிட்ட வீடியோ!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை போலீஸ் கமிஷனரை திடீரென சந்தித்த ஆர்யா: என்ன காரணம்?

ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த ஜெர்மன் வாழ் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரை ஆர்யா திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்கு!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

ரஷ்யாவில் அஜித் செய்யவிருக்கும் சாதனை: 'வலிமை' முடிந்தபின்னரும் திரும்பாததற்கு இதுதான் காரணம்!

தல அஜித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'வலிமை' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றார் என்றும் அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும்

என்னோட ஊஞ்சலாட யார் வர்றீங்க? நீச்சலுடையில் சன்னிலியோன் கேள்வி!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மாலத்தீவு சென்று உள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல கிளாமர்