close
Choose your channels

சென்னை போலீஸ் கமிஷனரை திடீரென சந்தித்த ஆர்யா: என்ன காரணம்?

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த ஜெர்மன் வாழ் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரை ஆர்யா திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற இளம்பெண் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் முகம்மது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தான் ஆர்யா போல ஜெர்மன் பெண்ணிடம் பேசி பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அதில் ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாக இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஜெர்மனி பெண் விட்ஜா மீண்டும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஆர்யா நேற்று சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.