நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட ஹைதி அதிபர்… திடுக்கிடும் பின்னணி!

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதனால் அந்நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

தீவு நாடான ஹைதி அதிபர் படுகொலை தொடர்பாக பல உலகத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலைக்கு பின்னால் வெளிநாட்டவர்களின் சதித்திட்டம் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது.

போர்ட்டா பிரின்ஸ் நகரில் வசித்துவந்த அதிபர் ஜோவெனல் மாய்சேவை நேற்றுமுன்தினம் இரவு, சில அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதம் ஏந்திவந்து சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இந்தக் கொலைக்குப் பின்னால் கொலம்பியாவை சேர்ந்த ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 26 பேரும் இரண்டு அமெரிக்கர்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

இதனால் ஹைதி நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அதிபரின் கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More News

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன வெங்கடேஷ் பட்

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த சீசனில் டைட்டில் வின்னர் கனி, ஷகிலா, அஸ்வின், புகழ்,

ராயல் என்ஃபீல்ட் பைக்கை அசால்ட்டாக ஓட்டும் மாளவிகா மோகனன்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் பைக்கில் சாலையில் செல்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது

செம குஷியில் ஊழியர்கள்… பேரிடர் காலத்தில் பெரும்தொகையை போனஸ் வழங்கும் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு தலா 1,500 அமெரிக்க டாலர்களை போனஸ் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்...! யுவன் ஹிட் பாடலின் புதிய சாதனை....!

தனுஷ்-ன்  ‘ரெளடி பேபி’ பாடலானது 5 மில்லியன் லைக்குகளைப் பெற்று இணையத்தையே அதிர வைத்துள்ளது

ஒரு நபரை “பேய்“ எதனால், எப்படி பிடிக்கிறது? இதற்குத் தீர்வுதான் என்ன?

முன்பெல்லாம் பேய் ஓட்டுவதற்கு என்றே ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு சாமியார் இருப்பார்.