close
Choose your channels

ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு?

Tuesday, August 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ராவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குந்த்ரா திடீரென கடந்த மாதம் 19ஆம் தேதி ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதுக்கு பின்னர் தான் ராஜ்குந்த்ரா இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்தது என்றும் இதனை அடுத்து அவர் தனது கணவரிடம் போலீசார் முன்னிலையில் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், போலீசார் தான் கணவன் மனைவி இடையே வாக்குவாதத்தை தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே வருவதாலும் அவருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகவும் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜ்குந்த்ராவை நிரந்தரமாக பிரிய ஷில்பா ஷெட்டி முடிவு செய்துவிட்டதாகவும் குழந்தைகளுடன் அவர் தனியாக வாழ முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஷில்பா செட்டி தற்போது படவாய்ப்புகள் மட்டுமின்றி தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் என்பதால் அவருக்கு நல்ல வருமானம் வருகிறது என்றும் ராஜ்குந்த்ரா சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் என்று உறுதியாக கூறி விட்டதாகவும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.