விஜயகாந்த் கதை கேட்டு ஓகே சொன்ன படம்.. சண்முகபாண்டியன் அடுத்த படத்தின் அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவரது மகன் சண்முகபாண்டியன் ’படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது மறைவுக்கு முன்பே இந்த படத்தின் கதையை கேட்டு அவர் ஓகே சொல்லி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே ’சகாப்தம்’ ’மதுரை வீரன்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் தற்போது ’படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது ஓகே சொல்லியதாகவும் அதன் பிறகு தான் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் விஜயகாந்த் படத்திற்கு இணையாக இந்த படத்தில் சண்டை காட்சிகள் இருப்பதாகவும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து சினிமாவில் நடித்து விஜயகாந்த் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் சண்முகபாண்டியன் இருப்பதாகவும் இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’நட்பே துணை’ என்ற படத்தை இயக்கிய அன்பு இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் பார்த்திபன் திரைக்கதை வசனத்தை எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து 'குணா' நாயகி வெளியேறியது ஏன்? 33 ஆண்டு ரகசியம்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம்

இந்த ஜோடி 14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறது மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் மோதிரங்களை மாற்றிக்கொண்டது.

நடிகர் சரத்குமார் மகள் மற்றும் நடிகையுமான வரலட்சுமிக்கு நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

துபாயில் எனக்கு  அரசியல்வாதி வீடு வாங்கி கொடுத்தாரா? ஆவேச அறிக்கை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்..!

அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு பிரபல அரசியல்வாதி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளது

'எஞ்சாயி எஞ்சாமி' மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?  சந்தோஷ் நாராயணன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது

'மஞ்சும்மள் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் மாஸ் நடிகரா? செம ஜாக்பாட்..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'மஞ்சும்மள் பாய்ஸ்' என்ற திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போடுகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி