close
Choose your channels

'எஞ்சாயி எஞ்சாமி' மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?  சந்தோஷ் நாராயணன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ மற்றும் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் 48 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பதும் இதனால் யூடியூபில் இருந்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய வருமானம் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி மியூசிக் வீடியோவின் உரிமை ஆகியவையும் சேர்த்தால் ஒரு பெரிய தொகை வருமானமாக வந்திருக்கும் என்று தான் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடலில் கிடைத்த வருமானம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது மனம் திறந்து தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது குறித்து வெளியிட்ட வீடியோவில் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளாக போகிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. ஆனால் இந்த பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுநாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் எங்களுக்கு கிடைக்கவில்லை, சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் நான் எனது சொந்த ஸ்டுடியோவை தொடங்கி உள்ளேன்.

தனி இசை கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை, இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிலுக்கு செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன், தனி இசை கலைஞர்கள் இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்றும் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு தனியிசை பாடல் மூலம் ஒரு பைசா கூட தனக்கு வருமானம் இல்லை என்று சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.