close
Choose your channels

விஜயகாந்த் கதை கேட்டு ஓகே சொன்ன படம்.. சண்முகபாண்டியன் அடுத்த படத்தின் அப்டேட்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவரது மகன் சண்முகபாண்டியன் ’படைத்தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது மறைவுக்கு முன்பே இந்த படத்தின் கதையை கேட்டு அவர் ஓகே சொல்லி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே ’சகாப்தம்’ ’மதுரை வீரன்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் தற்போது ’படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது ஓகே சொல்லியதாகவும் அதன் பிறகு தான் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் விஜயகாந்த் படத்திற்கு இணையாக இந்த படத்தில் சண்டை காட்சிகள் இருப்பதாகவும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து சினிமாவில் நடித்து விஜயகாந்த் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் சண்முகபாண்டியன் இருப்பதாகவும் இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’நட்பே துணை’ என்ற படத்தை இயக்கிய அன்பு இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் பார்த்திபன் திரைக்கதை வசனத்தை எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos