'எழுதிடவா இதழ் வழியாய்': விஜய் யேசுதாஸ், சின்மயி குரலில் 'டக்கர்' பாடல்..!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

நடிகர் சித்தார்த் நடித்து வரும் படங்களில் ஒன்று ’டக்கர்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ’மரகத மாலை’ என்று தொடங்கும் பாடல் வெளியானது.

நிவாஸ் கே பிரசன்னா கம்போஸ் செய்த இந்த பாடலை உமாதேவி எழுதியுள்ளார் என்பதும் பிரதீப் குமார், விஜய் ஜேசுதாஸ் மற்றும் சின்மயி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மனதை உருக்கும் வகையில் உள்ள இந்த மெலடி பாடலை முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தார்த் ஜோடியாக திவ்யன்ஷா நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மெலடி பாடலின் முதல் சில வரிகள் இதோ:

மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல் தானா

இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை
வழியது காதல் தீர்த்தம் தானா

வார்த்தைகள் தோற்குதே தீண்டலை தரும்
மொழி நீயா

தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை
நீ தானா..

எழுதிடவா இதழ் வழியாய் இடைவெளிதான் பெண்
உயிர் வலியா

More News

விஜய் பிறந்த நாளில் செய்ய வேண்டியதை நேற்றே செய்த ரசிகர்கள்: பொதுமக்கள் பாராட்டு..!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ஆம் தேதி செய்யும் செயலை நேற்றே ரசிகர்கள் செய்ததை அடுத்து பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்தார்… பிரபல சீரியல் நடிகை புகார்!

இந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக இருந்துவரும் சந்திரிகா சாஹா என்பவர் தனது 15 மாதக் குழந்தையை கணவரே தரையில் இழுத்துப்போட்டு மூன்று முறை அடித்தார்

'சென்னையில் ஒரு நாள்' உண்மை சம்பவத்தின் நாயகனை சந்தித்தேன்: சரத்குமாரின் நெகிழ்ச்சி பதிவு..!

கடந்த 2013 ஆம் ஆண்டு 'சென்னையில் ஒரு நாள்' என்ற திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான நிலையில் அந்த உண்மை சம்பவத்தின் உண்மை நாயகனை தான் நேரில் சந்தித்ததாக

'STR 48' படத்தில் சிம்புவை விட பலமடங்கு சம்பளம் வாங்கும் நடிகை தான் நாயகியா?

சிம்புவை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் பிரபல நடிகை ஒருவர் 'STR 48' படத்தில் நாயகி ஆக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதல்முறையாக 'பேபி பம்ப்' புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.. குழந்தை பிறப்பது எப்போது?

நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு