close
Choose your channels

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே படப்பிடிப்பு தொடக்கம்.. சிம்பு படத்தின் மாஸ் தகவல்..!

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்றும் அந்த படத்தில் அவர் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்புவுக்கு தான் த்ரிஷா ஜோடி என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருவதாகவும் சிம்பு சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை மணிரத்னம் படமாக்கி கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக தான் சிம்பு நேற்று தேர்தலில் வாக்கு போட கூட வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய உடன் சிம்பு ’தக்லைஃப்’ படத்தில் இணைந்ததை மணிரத்னம் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிம்பு நடித்த காட்சியின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, விரைவில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்ற தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.