close
Choose your channels

குழந்தைகளோடு குழந்தையாக மாறி விட்ட சிம்பு.. 'தக்லைஃப்' படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம்..!

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த போது குழந்தைகளுடன் சிம்பு எடுத்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் கமல்ஹாசனும் இந்த படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் இந்த படத்தில் சமீபத்தில் சிம்பு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதும் இந்த படத்தின் பிசினஸ் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, வையாபுரி உட்பட படக்குழுவினர் டெல்லியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்றும் டெல்லியில் உள்ள ஒரு கோவிலில் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு நடந்தது என்றும் மற்றும் சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அங்கு உள்ள குழந்தைகள் சிம்புவுடன் இணைந்த புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பியதை அடுத்து குழந்தையோடு குழந்தையாக சிம்பு இந்த புகைப்படத்தில் இருக்கும் காட்சியை ரசிகர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் சிம்பு மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.