close
Choose your channels

அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.. மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஈபிஎஸ்..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சற்றுமுன் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரை மகிழ்ச்சி உடன் கட்சிக்கு வரவேற்றுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த எஸ்பி சற்குணபாண்டியன் மருமகள் சிம்லா முத்துச்சோழன் என்பவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜெயலலிதா சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சிம்லா முத்துச்சோழன் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன் அதிமுகவில் இணைந்து உள்ளார். அவரை அதிமுக பொதுச் செயலாளர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.