18 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல பாடகர் மீது குற்றச்சாட்டிய இளம்பெண்!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

பிரபல அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகருமான ஜிம்மி ஆலன் தன்னை 18 மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார் என்று அவருடைய முன்னாள் மேலாளர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் கிராமிய இசைக்கலைஞரும் பாடகருமான ஜிம்மி ஆலன் ‘எ லைஃப் இன் எ ஹைவே‘, ‘அமெரிக்கன் ஐடல் எபிசோட்’ போன்ற இசை ஆல்பத்திற்காக ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் அவருடைய முன்னாள் மேலாளர் ஜேன் டோ என்பவர் தன்னை கடந்த 2021 முதல் 18 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார்.

முதன் முதலாக 2021 மார்ச் மாதத்தின் போது அமெரிக்கன் ஐடல் எபிசோட் இசை ஆல்பம் படமாக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். தொடர்ந்து பொதுஇடங்களிலும், பிரபல உணவங்களிலும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அவர் ஒரு முறை மதுவைக் கொடுத்து ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்தார். காலையில் எழுந்தபோது எனது பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. கூடவே ஜிம்மி ஆலன் கருத்தடை மாத்திரை உட்கொள்ளுமாறு வலியுறுத்தினார் என்று பாடகர் ஜிம்மி ஆலன் மீது ஜேன் டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜிம்மி ஆலனின் மனைவி அலெக்சிங் கோலே அவரைவிட்டு பிரிந்து தற்போது விவாகாரத்து கோரி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேன் டோ கூறியுள்ள புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான உச்ச நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. 

'சந்திரமுகி 2' படத்தின் மாஸ் தகவல்.. ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து 'சந்திரமுகி 2' படம் உருவாகி வருகிறது.

'எழுதிடவா இதழ் வழியாய்': விஜய் யேசுதாஸ், சின்மயி குரலில் 'டக்கர்' பாடல்..!

நடிகர் சித்தார்த் நடித்து வரும் படங்களில் ஒன்று 'டக்கர்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் பிறந்த நாளில் செய்ய வேண்டியதை நேற்றே செய்த ரசிகர்கள்: பொதுமக்கள் பாராட்டு..!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ஆம் தேதி செய்யும் செயலை நேற்றே ரசிகர்கள் செய்ததை அடுத்து பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்தார்… பிரபல சீரியல் நடிகை புகார்!

இந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக இருந்துவரும் சந்திரிகா சாஹா என்பவர் தனது 15 மாதக் குழந்தையை கணவரே தரையில் இழுத்துப்போட்டு மூன்று முறை அடித்தார்